டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வருவாய் இழப்பு – தமிழக அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு மேல்முறையீடு மனுவில் தகவல் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் குவிந்தனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் திறப்புக்கு மறுநாள் நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டதாக மேல்முறையீடு அரசு மனுவில் தகவல்.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகள் திறந்த இரண்டு நாட்களில் ரூ.295 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுபான கழகம் தெரிவித்தது. மதுபான கடைகளை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் குவிந்தது. இதனால் தனிமனித இடைவெளி மற்றும் சமூக விலகல் கேள்விக்குறியானது. இதனை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் உத்தரவுகளை கடைபிக்கவில்லை என கூறி மதுக்கடைகளை மே 17 ஆம் தேதி வரை திறக்க கூடாது என்றும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கொரோனா தொற்று தடுக்கும் வகையில், தனிமனித இடைவெளி கடைபிடித்தே மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது என்றும் மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

மிரட்டலான ஆட்டம்., ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ன் இரண்டாவது ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ்…

11 hours ago

ஜஸ்ட் மிஸ்.., IPL சம்பவத்தை தவறவிட்ட ஹைதிராபாத் அணி! இனி என்ன நடக்க போகுதோ?

ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில்…

11 hours ago

அதே மிரட்டல் அடி சம்பவம்., ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின்…

12 hours ago

கடலோர மக்கள் இதனை செய்யுங்கள்! ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ!

சென்னை : கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த…

13 hours ago

கொம்பன் இறங்கிட்டான்.., ராஜஸ்தானுக்கு வானவேடிக்கை காட்ட தொடங்கிய ஹைதிராபாத்!

ஹைதிராபாத் : கடந்த 2024 சீசனில், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி தனது அதிரடியான பேட்டிங்கால் எதிரணி பவுலர்களை கதிகலங்க செய்தது.…

15 hours ago

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…

16 hours ago