மக்களவை தேர்தல் 2019:அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது!!

Default Image
  • மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • அதிமுக தேர்தல் அறிக்கை இன்று  காலை வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1  தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.பாமக தொகுதிகளின் வேட்பாளரை பட்டியலை வெளியிட்டுள்ளது.தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.அதேபோல் தேமுதிகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று  காலை  வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்