மக்களவை தேர்தல் 2019:அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது!!
- மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- அதிமுக தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.பாமக தொகுதிகளின் வேட்பாளரை பட்டியலை வெளியிட்டுள்ளது.தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.அதேபோல் தேமுதிகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.