#BREAKING : மக்களவை இடைத்தேர்தல்.., விஜய் வசந்த் முன்னிலை..!

Default Image

கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  விஜய் வசந்த் முன்னிலை

காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.

இன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான  வாக்கு எண்ணிக்கையும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில், கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.

கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பாரதிய ஜனதா கட்சியின் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு சந்தித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்