அடியெடுத்து வைத்தால் அரஸ்ட்…அதிதீவிர வளையத்தில் தலைநகர்

Published by
kavitha

கொரோனா வைரஸ் காற்றை விட அதி விரைவாக பரவி வருகிறது தமிழகத்தில் மேலும் அதன் பரவல் மிக  உக்கிரமாக தலைநகரை தாக்கி வருகிறது.இதன் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு கட்டுப்பாட்டுகளை கட்டி உள்ளது அரசு.முன்பு இருந்த கட்டுப்பாடுகள் போல் இல்லாமல் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பட்டால் பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.அத்தியவசிய  தேவைகளான பால், மருந்து, பத்திரிகை விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரவு பிறப்பிப்பட்ட நிலையில் உத்தரவினை மீறி மக்கள் வீட்டை வீட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் குறித்த முழு விவரம் இதோ:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதாவது 19ந்தேதி முதல் வருகிற 30ம் தேதி வரையிலான  12 நாட்களுக்கு முழு ஊரடங்கு ஆனது அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. அதே போல் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது.அதில் இரவு 8 மணி முதல் 9 மணி பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவுரைப்படியே  நேற்று முன்தினம்(19ந்தேதி), நேற்றும் காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கி வந்தது. இதனோடு மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. இவைகளை  இணைக்கும் சாலைகளும் மூடப்பட்டது. இது மட்டுமின்றி தெருக்களிலும் கூட பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டது. மக்கள் எங்கேயும் செல்ல முடியாத அளவுக்கு நடவடிக்கையானது எடுக்கப்பட்டி இருந்தது.

அலுவலகம் செல்பவர்கள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை மற்றும் இ-பாஸ் வைத்திருந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எவ்வித அனுமதியும் இன்றி வெளியே சுற்றிய 3400 வாகனங்கள் நேற்று முன்தினம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல நேற்று 4 மாவட்டங்களில் ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டது. மக்கள்  வெளியே வந்தாலே அவர்களை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர். வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் பறிமுதலும்  செய்யப்பட்டது.இந்த நடவடிக்கையின் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் 21ம் தேதியாகிய இன்று முதல் வருகிற 28ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எந்தவொரு தளர்வுகளும் இல்லாத தீவிர ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பால், மருந்து கடைகள், பத்திரிகை அலுவலகங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவையை தவிர்த்து யாரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எச்சரிக்கையும் மீறி தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டில் இருந்து இன்று வெளியே சாலையில் நடந்து சென்றால் உடனடியாக அவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் வாகன ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி  “ட்ரோன்” காமிரா மூலமாக அனைத்து தெருக்களும்  கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

2 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

2 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

2 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

2 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago