தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது.
இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மக்களின் கூட்டம் தஞ்சையில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பிப்ரவரி 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…