வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 9ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உதவிட்டுள்ளார்.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 26ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.