ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடைபெறுவது போல, கேரளாவில் ஜாதி, மத வேறுபாடின்று ஆண்டுதவாறது கொண்டாடப்படும் பண்டிகை, ஓணம். ஆகஸ்ட் 22- ம் தேதி தொடங்கி, அடுத்த பத்து நாள்களுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், ஓணம் பண்டிகையை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் எனவும், பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த அம்மாநில அரசு தடை விதித்டுள்ளது.
இந்தநிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31- ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்த அவர், அந்த விடுமுறைக்கு பதில், செப்டம்பர் மாதம் 12- ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படுகிறதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…