ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடைபெறுவது போல, கேரளாவில் ஜாதி, மத வேறுபாடின்று ஆண்டுதவாறது கொண்டாடப்படும் பண்டிகை, ஓணம். ஆகஸ்ட் 22- ம் தேதி தொடங்கி, அடுத்த பத்து நாள்களுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், ஓணம் பண்டிகையை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் எனவும், பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த அம்மாநில அரசு தடை விதித்டுள்ளது.
இந்தநிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31- ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்த அவர், அந்த விடுமுறைக்கு பதில், செப்டம்பர் மாதம் 12- ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படுகிறதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…