#BREAKING: உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு..!

Default Image

தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனி அலுவலர் பதவி காலத்தை ஆறு மாதம் நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தனி அலுவலர் பதவி காலத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம்  அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தனி அலுவலர் பதவி காலம் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதமும், புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிப்புக்கப்பட்டுள்ளது. தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தனர். ஜூன் 30-ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்