நாளை(அக்.6) உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக,தேர்தலில் வேட்பாளர்கள் கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து, முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில்,அக்.6 ஆம் தேதியான நாளை உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதற்காக,தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் 17,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் 6-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…