உள்ளாட்சித் தேர்தல்-திமுக ஆலோசனை

- ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
- திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.இதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.பின்பு ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.சென்னை தியாராயநகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு -இல் உள்ள அரங்கில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. ,எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025
எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
March 21, 2025