உள்ளாட்சித் தேர்தல் -இன்று கட்சிகளுடன் ஆலோசனை

Default Image

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.ஆனால் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதற்காக விருப்பமனுக்களை விநியோகம் செய்து வருகின்றன.
ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது .இன்று  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில்  வைத்து இன்று காலை  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்