சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் பங்கேற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக – பாஜக போட்டியிடும் இடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடைய, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசியிருந்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்ற கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அதனை உறுதி செய்தது.
இந்த சூழலில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே எந்தெந்த இடங்களில் போட்டிடுவது என பங்கீடு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…