தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தேர்தல் இரண்டுகட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் வாக்குசீட்டு முறைதான் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை பயன்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் குறித்த விவரத்தை காண்போம். வெள்ளை நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.இளம் சிவப்பு நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். பச்சை நிற வாக்குச்சீட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்து.கட்சி சார்பற்ற தேர்தலான ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் பெயர், ஓட்டு சீட்டில் இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…