ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு – கே.என் நேரு..!

Default Image

ஒரு சில நாட்களில் மாநகராட்சி, நகராட்சி பகுதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஒரு சில நாட்களில் மாநகராட்சி, நகராட்சி பகுதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்