இந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி பகுதிகளுக்கும் பின்னர் அறிவிக்கப்படும் என்று பழனிச்சாமி தெரிவித்தார்.
தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது என்று தெரிவித்துள்ளார் .ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு ,வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது.இந்த இரு கட்சிகளும் எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அறிக்கை வெளியானது.அதில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை.ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர்,கொடி ,ரஜினியின் பெயரையோ,புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக ரஜினி மற்றும் கமல் ஒன்றாக இணைந்தால் தமிழகத்திற்கு நல்லது என்று எஸ் .ஏ.சந்திரசேகர் கமல் 60 நிகழ்ச்சியில் கூறியது, அதன்பின் கமல் மற்றும் ரஜினி இருவரும் தனித்தனியாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, இன்று இருவரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஒரே நாளில் ஒரே மாதிரியாக வெளியிட்டுள்ள அறிக்கை இவர்களின் அரசியல் போக்கை ஒன்றாக இணைப்பதாக அரசியல் விமசர்கள் கூறுகின்றனர் .
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது…
ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்…
கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…