இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி, பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், முதலில் கால்நடை கிளை நிலையம் துவக்கப்பட்ட பின் மருந்தகம் துவக்கப்படும், அதன் பின்னர் தான் அது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் எம தெரிவித்தார். பின்னர் உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர், அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.1,656 கோடி செலவில் 46 லட்சத்து 20 ஆயிரத்து 91 கால்நடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் கிராமங்களுக்கே சென்று அம்மா ஆம்புலன்ஸ் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…