ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
தமிழ்நாட்டில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம். ஒருவர் மருத்துவப் படிப்பை படித்து முடிக்க ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவாகக்கூடும் என்றும், ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
அப்படியானால் கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ சேவை எங்கிருந்து கிடைக்கும்? மருத்துவக்கல்வி வணிகமயமாவதை நீட் தடுக்கும் லட்சணம் இதுதானா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்தால் கிராமப்புறங்களில் கருணையுடன் பணியாற்றுவார்கள். ஆனால், அதற்கான 7.5 இட ஒதுக்கீட்டையும் வழங்க மறுக்கிறார்கள். வாழ்க நீட்! வளர்க தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…