சென்னை: இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவம் தாக்க பதிலடி கொடுத்துள்ளது.
