சென்னை :பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க தேசிய புலனாய்வு குழு தலைவர் துள்சி கப்பார்டு உடன் வாஷிங்டன் டி.சியில் சந்திப்பை நிகழ்த்தினார். அவருடன் இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி ஆலோசித்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், என்னை சோதிக்காதீர்கள். பல வாய்ப்புகள் வந்தபோதும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவன் நான் மறந்துவிடாதீர்கள் பேசியது என அதிமுக குறித்த பேச்சுக்கள் அரசியல் களத்தில் தற்போது மிக பரபரப்பாக இயங்கி வருகிறது.
