Live : மகாராஷ்டிரா ரயில் விபத்து முதல்…ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் வரை!

மகாராஷ்டிரா புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து முதல் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் வரை இன்றயை முக்கியமான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

live news

சென்னை :  நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்துள்ளன. இதனை பொதுப் பெட்டியில் இருந்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வதந்தி பரவியதை நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து இரு வழிகளிலும் குதித்து ஓடியுள்ளனர். அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பயணிகள் மீது அதே வேகத்தில் மோதியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று முதல் தபால் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 27ம் தேதி வரை வாக்கு சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

1 of 1
மணிகண்டன்

அதிமுக – பாஜக கூட்டணி :

  • இபிஎஸ் உடன் நேரடியாக பேசினாலே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
  • மணிகண்டன்

    தமிழ்நாட்டில் இரும்பு..,

  • தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது. கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் பிறந்த மூத்த குடி தமிழ்க்குடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
  • மணிகண்டன்

    நூலை வெளியிட்ட முதல்வர்!

  • சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை என்ற நூலின் தமிழ், ஆங்கில பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
  • மணிகண்டன்

    தடுமாறும் ரோஹித் சர்மா!

  • மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் ஷர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
  • மணிகண்டன்

    புரட்டிப்போட்ட பனிப்புயல்

  • அமெரிக்க மாகாணங்களான புளோரிடா, டெக்சாஸ், லூசியானா, அலபாமா, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பனிப்புயல் தாக்கத்தால் 10 பேர் உயிரிழந்தனர். 2,100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து. சாலை போக்குவரத்து ஏற்பட்டு பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.
  • மணிகண்டன்

    2 அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர்!

  • கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகங்களுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.இந்த அருங்காட்சியகங்கள் கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.39 கோடி செலவீட்டில் அமைக்கப்பட உள்ளது.
  • மணிகண்டன்

    பலி எண்ணிக்கை உயர்வு!

  • மகாராஷ்டிரா புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள், ரயிலில் தீ பிடித்தது எனும் வதந்தியை நம்பி கிழே இறங்கி ஓடுகையில் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்