Live : ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகள் முதல்… விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் வரை…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு பணிகள், இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Today Live 05122024

சென்னை : ஃபெஞ்சல் புயல் கடந்த ஞாயிற்று கிழமையே கரையை கடந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை 4.06 மணியளவில்  புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

1 of 1
மணிகண்டன்

ஒரு மாத ஊதியம் : 

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபெஞ்சல் புயல் நிவாரண தொகையாக  தனது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளார். 
  • மணிகண்டன்

    ரூ.5 லட்சம் நிவாரணம் : 

  • சென்னை பட்டினம்பாக்கத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். 
  • பால முருகன்

    சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலை மறியல்

    சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்லாப் விழுந்து நேற்றிரவு குலாப் என்ற இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கலங்கரை விளக்கம் லூப் சாலையில் இருந்து அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசை கட்டி நிற்கின்றன.

    மணிகண்டன்

    விபத்து – 3 பேர் பலி :

  • திருவாரூர் நன்னிலம் அருகே ஆம்னி வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • மணிகண்டன்

    மீனவர்கள் கைது :

  • கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்படித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
  • மணிகண்டன்

    ஃபெஞ்சல் புயல் நிவாரணம் :

  • ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை, காங்கேயத்தில் இருந்து 3 வாகனங்களில் அமைச்சர் மெய்யநாதன் அனுப்பி வைத்தார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்