பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும்! – மநீம

Published by
லீனா

பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் தேசியக்கொடியேற்ற பாதுகாப்பு கோரி காவல்துறைக்குக் கடிதம் எழுதிய விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி, டிஎஸ்பி-க்கு எழுதிய கடிதத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான தான், தீண்டாமை காரணமாக கடந்த குடியரசு தினத்தன்று அரசுப்பள்ளியில் கொடியேற்றவிடாமல் தடுக்கப்பட்டதாகவும்; நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது அரசுப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியளித்துப் பாதுகாப்பும் வழங்கிடவேண்டும் என்று கோரியுள்ளார்.

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுப்பது வேதனைக்குரியது. பட்டியலின சமூகத்தில் பிறந்ததற்காக தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கும் அவலம் நீடிப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல.

சமூகத்தில் அனைத்துத் தரப்பினரின் கைகளுக்கும் அதிகாரத்தைக் கொண்டுசேர்த்து “சமூக நீதியைக்” காத்திடுவது என்பது உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்றாகும். எடுத்தவாய்நத்தம் நிகழ்வானது அந்த அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி அவர்கள் பள்ளியிலோ அல்லது மாற்று இடத்திலோ கொடியேற்ற வழிவகை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது. ஆகஸ்ட்-15 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களிலும் இதுபோன்ற சமூக அநீதிகள் நிகழலாம்.

ஆகவே, சமூகநீதியை குலைப்போர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவிடவேண்டும். அரசின் நடவடிக்கைகளைத் தாண்டி, மக்களிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். “தீண்டாமை மனிதநேயமற்ற செயலும், பெருங்குற்றமும் ஆகும்” என்று பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள வரிகள் காவல்துறையால் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதைவிட மக்களின் மனமாற்றத்தின் மூலம் நிகழவேண்டும். இதுவே “சமூகநீதியை” உறுதிப்படுத்த நிரந்தரத் தீர்வாக அமையும்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

8 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

20 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

32 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

38 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

54 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago