TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ…

Published by
மணிகண்டன்

சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (இரண்டாவது நாள்) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. கடந்த 2 நாள் மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் உடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் மாநாட்டில் இதுவரை பல்வேறு நிறுவனங்களுடன் 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக 14.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  நேரடி மற்றும் மறைமுகம் என 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

சென்னையில் நடைபெற்ற இரண்டாவது நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான சில முக்கிய நிறுவனங்கள் பற்றியும் , அதன் மூலம் தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை விவரங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்….

  • தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க 36,238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை சார்பில் 1070 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • கள்ளக்குறிச்சியில் புதிய காலணி ஆலை துவங்கப்பட உள்ளது. 2302 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
  • விழுப்புரத்தில் 500 கோடிரூபாய் முதலீட்டிலும், பெரம்பலூரில் 48 கோடி ரூபாய் முதலீட்டிலும் புதிய காலணி ஆலைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அதானி குழுமத்தின் எரிசக்தி துறை சார்பில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அதானி குழுமத்தின் தொலைத்தொடர்புத்துறை சார்பாக 13,200 கோடி ரூபாய் செலவில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • அதானி எனர்ஜி  சார்பில் 24,500 கோடி ரூபாய்க்கு முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • சிபிசிஎல் நாகப்பட்டினத்தில் புதிய பெட்ரோலியம் ஆலை அமைக்க 17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • ஹிட்டாச்சி நிறுவனம் சார்பாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • மஹிந்திரா நிறுவனம் சார்பாக 1800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • L & T நிறுவனம் சார்பாக ஐடி நிறுவனம் அமைக்க 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • காவேரி மருத்துவமனை சார்பாக பல்நோக்கு மருத்துவமனை அமைக்க 1200 கோடி ருபாய் அளவில் முதலீடு செய்யப்பட உள்ளது.
  • டாடா நிறுவனத்தின்ரசாயன தொழிற்சாலை ராமநாதபுரத்தில் அமைக்க 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்.
  • ராயல் என்பீல்டு நிறுவனம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் அமைக்க 3000 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் 2,740 கோடி ரூபாய் செலவீட்டில் சென்னையில் டேட்டா தளம் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

 

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago