#Breaking:தமிழகம் முழுவதும்…நேற்று ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு மது விற்பனையா?..!

Published by
Edison

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில்,டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதனால்,டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை நேற்றே மதுப்பிரியர்கள் வாங்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சமாக,சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கும்,திருச்சியில் ரூ.42.50 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும்,கோவையில் ரூ.41.28 கோடிக்கும்,சேலத்தில் ரூ.40.85 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை  உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…

3 hours ago

“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…

3 hours ago

இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…

3 hours ago

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…

4 hours ago

IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!

கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…

4 hours ago

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…

4 hours ago