தமிழகத்தில் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிப்பு.?

Published by
Dinasuvadu desk

தமிழகம் முழுவதும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால்,டாஸ்மாக் கடைகள்  உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி  மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம்  டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு  இடைக்கால தடைவிதித்தது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 142 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

20 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

41 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

44 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago