தமிழகத்தில் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிப்பு.?

Default Image

தமிழகம் முழுவதும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால்,டாஸ்மாக் கடைகள்  உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி  மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம்  டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு  இடைக்கால தடைவிதித்தது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலனை முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 142 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்