கர்நாடக அரசைப்போல தமிழக அரசும் ரூ.5000 வழங்கவேண்டும்- தமிழக பாஜக தலைவர் எல். முருகன்

Default Image

கர்நாடக பாஜக அரசை போல தமிழக அரசும் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.பல தரப்பு மக்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குஇடையில்  தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், கர்நாடக பாஜக அரசு முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூ.5000 தமிழக அரசு வழங்க வேண்டும்.அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்