தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன் என வைகோ கூறியுள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டதால் தமிழகத்திற்கு விமோசனம் பிறந்து இருக்கின்றது என்றுதான் கருதுகிறேன். எனவே தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பெரியார், அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது. எவரின் மனதையும் புண்படுத்தாமல் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…