சமூக நீதியின் பாதையில் பயணிப்போம்: தவெக மாநாட்டில் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்பு.!

தவெக மாநாட்டு மேடையில் கட்சி நிர்வாகி உறுதி மொழியைக் கூற தொண்டர்களும் பின் தொடர்ந்து உறுதி மொழியை ஏற்றனர்.

TVK Uruthimozhi

விழுப்புரம் : தவெக முதல் மாநாடு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு, சுமார் 8 லட்சம் குவிந்துள்ள மாநாட்டுத் திடலில் தொடக்கத்தில், மாநாடு மேடையில் நடந்து வந்த அவருக்கு வழிநெடுகிலும் கட்சி துண்டுகளை தொண்டர்கள் வீசினர். அதனை லாவகமாக பிடித்து தோளில் சுமந்து சென்றார்.

அதன்பிறகு, தவெக மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சி தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றினார். பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு அதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகி கட்சியின் உறுதிமொழியை மேடையில் கூறினார்.

அவர் மேடையில் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழிக் கூற, அதை பின் தொடர்ந்து இதர கட்சி நிர்வாகிகள், மாநாட்டு திடலில் குவிந்த தொண்டர்கள், கட்சித் தலைவர் விஜய் அனைவரும் அவர்களது நெஞ்சில் கைவைத்து உறுதி மொழியைக் ஏற்றனர். அதன் பிறகு தவெக கட்சியின் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்