அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

Default Image

அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அஇஅதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே கட்சிக்குள்ளேயே சில சர்ச்சைகள் இருந்து வரக்கூடிய நிலையில், விரைவில் அதிமுக வேட்பாளர் யார் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்பதை ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் களத்துக்கு வந்து விட்டால் எதிரிகளை வீழ்த்துவதில் ஒன்றாக இணைந்து அம்மாவின் பிள்ளைகளாக வெல்வோம் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்