அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்போம் – உதயநிதி ஸ்டாலின்

Default Image
  • குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டார். 
  • அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்போம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

நேற்று குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர்.அப்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டனர்.பின்னர் போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.இதனால் அந்த இடத்தில் போலீசார் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்பு  கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவிற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்போம் என்று  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்