அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும் என ஆளுநர் ரவி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள். நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாள் ஆகும். வாய்மையும் மரபும் இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் எடுத்தியம்புகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கி செல்லவும், அறியாமை எனும் நிலையிலிருந்து விலகி மேலான அறிவை எய்தவும் மனச்சோர்வில் இருந்து விடுபட்டு பேரின்பத்தை பெறவும், இந்த நாள் நமக்கு ஊக்கம் அளிக்கிறது.
இதனால் நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், தோழமை உணர்வையும் வலுப்பெற செய்வதுடன் சமுதாயத் தொண்டாற்றவும் நமக்கு ஊக்கம் அளிக்கிறது. அறியாமை எனும் இருளை அகற்றி, அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும். இந்த தீபாவளி நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும், ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…
சென்னை : சென்னையின் அசோக் நகர் பகுதியில் அமைந்திருந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் (Udhayam Theatre) தற்போது இடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம்.…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் பாலியல் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. எனவே, பாலியல் குற்றங்களுக்கு…