11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களை 12 ஆம் வகுப்பில் சேர்ந்த பின் எழுதலாம்- செங்கோட்டையன்!

Default Image

பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்து படித்தபடியே பதினொன்றாம் வகுப்பில் வெற்றி பெறாத மாணவர்கள் தேர்வை எழுதலாம் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இன்று காலை 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெளியாகின. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறிய அவர், பதினொன்றாம் வகுப்பில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து தான் உள்ளது. ஆனால், பதினொன்றாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்து படித்து கொண்டிருந்தபடியே, தோல்வியுற்ற பாடங்களுக்கான தேர்வு எழுதலாம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்