ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்காக பாடங்கள் அனைத்தும் இன்று முதல் ஸ்வயம் பிரபா சேனல் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் அவதிப்படும் மாணவர்களுக்காக ஆப்லைன் வடிவில் பாடங்களை வழங்குவதற்கான முயற்சியை சென்னை ஐ. ஐ. டி எடுத்துள்ளது.
அதன்படி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களின் பாடங்களில் முக்கியமானவற்றை மட்டும் 300 மணி நேர காலளவில் வீடியோவாக சென்னை ஐ. ஐ. டி மற்றும் பல்வேறு மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வீடியோவாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பாட தொகுப்பை இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை மத்திய அரசின் ஸ்வயம் பிரபா கல்வி சேனல் மூலம் ஒளிப்பரப்பவுள்ளனர் . ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் இந்த சேனலில் ஒளிப்பரப்பப்படும் வீடியோவை பார்க்குமாறும், தினமும் ஒளிப்பரப்படும் பாடங்களின் அட்டவணையை http://www.swayamprabha.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை ஐ. ஐ. டி தெரிவித்துள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…