முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இன்று கலைவாணர் அரங்கில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர். இவர்களுக்கு பதவியேற்று வைக்க தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு ஆளுநர் முன்னிலையில் நேற்று தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுக் கூறி எம்.எல்.ஏவாக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து, தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும் , போடிநாயணக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் பதவியேற்று கொண்டார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…