மீண்டும் இப்படி நடந்தால் முதல்வர் பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

முக ஸ்டாலின் குறித்து பொய்யாக பேசிய முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முன்தினம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பேசும்போது, உண்மை பேசுவதற்கு பதிலாக ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில நினைவிடம் கட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் முக ஸ்டாலின் மீது பொய்யாக பேசிருக்கிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றசாட்டியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டவர் எங்கள் தலைவர் முக ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோது கூட எங்கள் தலைவர் ஸ்டாலினும், திமுகவினரும் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை, அதுவே உண்மை. நினைவிடம் கட்டக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள், தற்போது அவர்கள் கூட்டணியில் இருக்கும் பாமக என்பதை ஏனோ பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பேசியிருக்கிறார்.

இது ஜெயலலிதாவுக்கு செய்கின்ற பச்சை துரோகம். 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர், அப்போது பேசாமல், தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொடர்ந்து பொய் பிரச்சாரங்கள் நடத்தி வருவதில் இதுவும் ஒன்றாகும். எனவே, முதல்வர் பழனிசாமியின் இந்த போக்கிற்கு மிகவும் கண்டனத்துக்குரியது. இதுபோன்று மீண்டும் பொய்களை பேசினால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கையை திமுக எடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைத்துவரப்பட்ட கூட்டத்தினர், கலைஞர் நினைவிடத்தில் கூடியது, தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி பொய்யாக பேசி வருகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago