கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து வெளியேறினேன்-துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உருக்கம்

Published by
Venu

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில்   “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற  புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில்  துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பேசுகையில்,அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும்,பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கவேண்டும். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதிலேயே மகிழ்ச்சி.

ஆந்திராவில் வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன்.மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. துணை குடியரசு தலைவராக என்னை தேர்ந்தெடுத்தபோது நான் கண்ணீர் விட்டேன் . துணை குடியரசு தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து வெளியேறினேன்.துணை குடியரசு தலைவராக  வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

சட்டப்பிரிவு 370-ஐ  நீக்கிய பிறகு  உலக நாடுகள் இந்தியாவிற்கு முழு ஆதரவுகள் அளித்து வருகின்றது.இயற்கையை நாம் பாதுகாத்தல் ,இயற்கை நம்மை  பாதுகாக்கும் என்பதை உணர வேண்டும்.

நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட  கட்சி வேறுபாடின்றி எம்.பி.களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சட்டம் இயற்றுவது மட்டுமே அரசின் கடமை அல்ல சட்டங்கள் சரியாக அமல்படுத்துவதும் அரசின் கடமை.

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.  மக்கள் எந்த சேவைக்காகவும் வரிசையில்  நிற்க கூடாது .லைனில் நிற்பதை தவிர்த்து ஆன்லைன் ஆக வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் 20 % மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் தொடர்பான வழக்குகளில் அடுத்த தேர்தலே  வந்து விடும் அளவு தீர்ப்பு வெளியாவதில்லை என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

 

Published by
Venu

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

9 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

10 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

11 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

12 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

12 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

13 hours ago