தலைவர்கள் சிலைக்கு முழு ஊரடங்கு நாளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி!

Published by
Rebekal

முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாளிலும் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவலால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்டு 31 வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் கே சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கூட தலைவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம் என தற்போது அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் உடன் சென்று மாலை அணிவித்து வரலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மரியாதை செய்யப்படும் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 5 பேருக்கு மிகாமலும், அந்த மாவட்டத்தை சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேருக்கு மிகாமலும் சம்பந்தப்பட்ட கலெக்டரின் முன் அனுமதி மற்றும் வாகன அனுமதிப் பெற்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

4 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

52 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago