பாஜக தலைமையில் NDA கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெரும்.! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை.!

பாஜக தலைமையில் NDA கூட்டணியில் 330 இடங்களில் வெற்றி பெரும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது . இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணி :
டெல்லியில் பாஜக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அதிமுக அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போதும் சரி, எம்ஜிஆர் இருந்தபோதும் சரி எங்களோடு ஒருமித்த கருத்தோடு இருப்பவர்களுடன் எப்போதும் கூட்டணி அமைத்து அதில் வெற்றி பெற்றுளாம். அதே போல அதிமுக இப்போதும் செயல்படுகிறது.
330 இடங்களில் வெற்றி :
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி NDA ஆட்சியமைத்த பின்னர் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும். கொரோனாவில் பல்வேறு நாடுகளும் சிக்கி தவித்த போது, இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்படவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடஙக்ளில் வெற்றி பெரும்.
1.70 கோடி அதிமுக உறுப்பினர்கள் :
அதிமுகவும் , பாஜகவும் ஒருமித்த கருத்தோடு தான் செயல்படுகிறோம். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. அதிக அளவு உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக. நேற்று வரை அதிமுகவில் 1.70 கோடி உறுப்பினர்களாக உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது 1.5 கோடியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்தது. எதிர்காலத்தில் சிறப்பான ஆட்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் புதியவர்கள் கட்சியில் இணைகிறார்கள்.
2ஜி ஊழல் வழக்கு :
இந்தியாய்வில் பல மாநிலங்கள் உள்ளது. ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். அவர்கள் எங்களை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டனர்.
செந்தில் பாலாஜி – பொன்முடி :
அதே போல கர்நாடகாவில் முதலவர் ஸ்டாலினை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஊழல் வழக்கு காரணமாக சிறை சென்றவர். செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யபட்டு சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி மீது விசாரணை நடைபெறுகிறது. என திமுகவினர் பற்றி பல்வேறு விமர்சனங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.
கோடநாடு கொலை வழக்கு :
கோடநாடு கொலை வழக்கு பற்றி பேசுகையில், கோடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு வாதாடியாவர் திமுகவினர். அவர் தான் தற்போது நீலகிரி மாவட்ட அரசு வக்கீலாக இருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தது திமுகவினர் என பல்வேறு குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.