கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவி – முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில்,மக்களுக்காக வாழ்ந்த தலைவர் எம்ஜிஆர். தன்னுடைய மக்களுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி. எம்ஜிஆர் தமிழகத்துக்கு மட்டும் தலைவரல்ல, தேசியத் தலைவர்.இந்தியாவில் பிரிந்த இயக்கங்கள் இணைந்ததாக வரலாறு கிடையாது. பிரிந்த இயக்கம் சேர்ந்தது அதிமுக மட்டுமே. திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை.காவிரி பிரச்னைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது .அதிமுக அரசு ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை, என்றும் யாராலும் அழிக்க முடியாது.

கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் .ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்