சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்- முதல்வர் ..!

Published by
murugan

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் மாபெரும் இயக்கம் வெற்றி பெறும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டது பாராட்டத்தக்கது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளைக் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.  தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது. நேர்மையான வெளிப்படையான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. மக்கள் விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழ வேண்டும் கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணிக்க வேண்டும். மக்கள் பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்க போலீசார் பாரபட்சம் காண்பிக்கக் கூடாது. மக்களுக்குப் பயனளிக்கும் முன்னெடுப்புகளை விளக்கமாக தெரிவித்தால் அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என கூறினார். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பசுமை பரப்பினை 33% ஆக உயர்த்திட வேண்டும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

22 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

43 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

46 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago