அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா? என முக ஸ்டாலின் பேச்சு.

வேலூர் மாவட்டத்தில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏதோ தேர்தலுக்காக மட்டும் வரும் ஸ்டாலினாக நான் வரவில்லை, எப்பொழுதும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன் என கூறினார்.

இந்த வட்டாரத்து மக்களுடைய எந்தக் கோரிக்கையையாவது கடந்த 10 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு நிறைவேற்றி இருக்கிறதா? என்றும் இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், இங்கிருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. அது உறுதி. அவர்கள் வாஷ் அவுட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி நடைபெற்றதோ அப்படி தான் நடக்கப்போகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை. குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றி பெற்றாலும் அது பாஜக எம்எல்ஏ தான் என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் அப்பட்டமாக, பொய் சொல்கிறார். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று சொல்கிறார். அவர் படிப்படியாகவா வந்தார்? ஊர்ந்து வந்தார், தவழ்ந்து வந்தார். நான் உழைத்து வந்தேன் என்பது இங்கிருக்கும் நம்முடைய தொண்டர்களை கேட்டால் சொல்வார்கள். அதிமுக ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், ரவுடியிசங்களை பட்டியலிட்டு சொல்ல தொடங்கினால், நேரம் போதாது என தெரிவித்துள்ளார்.

சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?. இது திராவிட மண், உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. தமிழருடைய சுயமரியாதை, தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும் என்றால், திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 min ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

6 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

26 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

26 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

39 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago