ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது – ஓபிஎஸ்

Published by
லீனா

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில். சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது என ஓபிஎஸ் அறிக்கை. 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல் மற்றும் கருப்பு கொடிகளை வீசியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்ற நிலையில், காலை மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருக்கடையூர் இன்று அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மயிலாடுதுறை தருமபுரி ஆதின திருமடத்திற்கு செல்லும் வழியில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேதகு ஆளுநருக்கு எதிரான இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மேதகு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில். சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.

மேற்படி சம்பவத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள நிலையில், இது நிச்சயம் தி.மு.க. அரசிற்கு தெரிந்துதான் நடந்திருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கிறது. மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDvENG : “நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு” மாஸ் கட்டிய ‘ஹிட்’மேன்! தொடரை வென்ற இந்தியா!

INDvENG : “நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு” மாஸ் கட்டிய ‘ஹிட்’மேன்! தொடரை வென்ற இந்தியா!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…

25 minutes ago

“தேர்தலில் வெற்றி பெற விஜய் ‘இதை’ செய்ய வேண்டும்” பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!

மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…

13 hours ago

INDvENG : இங்கிலாந்தை சுழற்றிய ஜடேஜா! இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…

14 hours ago

விராட் கோலிக்காக ‘பலிகடா’ ஆக்கப்பட்டாரா ஜெய்ஸ்வால்? ரசிகர்கள் அதிருப்தி!

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…

14 hours ago

அஜித் ரசிகர்களுக்கு அடுத்த ‘ஷாக்’! போர்ச்சுகல்லில் கார் விபத்தில் சிக்கிய AK!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…

17 hours ago

INDvENG : மீண்டும் அதையே செய்த இங்கிலாந்து கேப்டன்! பந்துவீசி வரும் இந்திய அணி!

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…

17 hours ago