விசாரணை என்ற பெயரில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுகிறது திமுக அரசு என்று எதிர்க்கட்சி தலைவர் புகார்.
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்துக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் புகாரளித்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை. அம்மா க்ளினிக்கை மூடியதன் மூலம் ஏழை மீது அரசுக்கு அக்கறையில்லை என்பதை காட்டுகிறது.
விசாரணை என்ற பெயரில் அதிமுகவினரை அழைத்து சென்று அலைக்கழித்து பொய் வழக்குகள் போடுகின்றனர். வடகிழக்கு பருவமைழைக்கு முன்பே தூர்வாரியிருந்தால் மழைநீர் தேங்காமல் இருந்திருக்கும் என்று ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…