முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் தொடக்கம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்து வைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளத்தை தொடங்கிவைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முதலாமச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மே 6ம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும், மே 7 க்கு பிறகு வரும் நிதியை தனிக்கணக்காக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எளிதான நிவாரண நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையத்தளம் சிறப்பாக இருந்ததால், அதன் முன்மாதிரியாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மொபைல், வெளிநாடு, உள்நாடு, கார்ப்பரேட் என எல்லா வகை நிதி வரவுகள் குறித்தும் இணைய தளத்தில் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 7ம் தேதி முதல் நேற்று வரை ரூ.472.62 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது என்றும் இதுவரை ரூ.241 கோடி கொரோனா தடுப்பு நடைவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசில் பிஎம் கேர்ஸ் என வைத்துள்ள கணக்கில் தணிக்கை கிடையாது, விவரம் கிடையாது எனவும் விமர்சித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு பட்ஜெட் தாக்களுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago