ஈரோடு கிழக்கு தொகுதி கிடைத்தேர்தல் பரப்புரையில் நேற்று இரவு திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால் இடைத்தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
கல்வீச்சு : நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரம் அருகே காவிரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
பிரச்சாரம் நிறுத்தம் : இந்த சம்பவத்தில் நாம் தமிழர் மற்றும் திமுக கட்சியினர் 11 பேர் காயமடைந்தனர். மேலும் 3 காவல் துறையினரும் காயமடைந்தனர். இதில் சிலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்குப்பதிவு : இந்த சம்பவத்தை அடுத்து நாம் தமிழர் பிரச்சாரம் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது தாக்குதலில் ஈடுபட்ட திமுக – நாம் தமிழர் கட்சியினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…