திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை கொள்ளை கைரேகை அணிந்ததும் தெரிந்தது. சம்பவம் நடைபெற்றது. நகை கடையின் பின்புற சுவரில் துளை போட்டு இருவர் உட்புகுந்து 30 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்தததில், அவர்கள் கோமாளி மாஸ்க் அணிந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் உடை அணிந்தும், கைரேகை பட கூடாது என கையில் உறை அணிந்து கொண்டு தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் மோப்ப நாய்கள் கண்டறிய கூடாது என மிளகாய் பொடி தூவியும் சென்றுள்ளார். இதனால் மோப்ப நாய்கள் கரூர் சாலை வரை சென்று திரும்பின. பின்னர், புதிதிக விடுதிகளில் தங்கியவர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்தவர்கள் என பல வகையில் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதில், சந்தேகப்படும்படியாக விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் பிடித்தனர். அதில் ஒருவர் தப்ப முயன்றதால், அவரை போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில வைத்து விசாரணை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…