லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை -முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

Published by
Rebekal

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் முருகன் சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

திருச்சியில் உள்ள மிகப் பெரிய நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 30 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் அந்த கடையிலேயே சுரங்கம் போல சுவரில் ஓட்டை போடப்பட்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முக்கியமான கொள்ளைக்காரர்களாகிய முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்பட்டது.

ஆனால் முருகனின் சகோதரி கனகவல்லி, மணிகண்டன் ஆகியோர் தான் சில தினங்களில் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு முருகன் அக்டோபர் 11 ம் தேதியும் சுரேஷ் அக்டோபர் 10-ஆம் தேதியும் செங்கம் நீதிமன்றத்தில் தாங்களாகவே வந்து சரணடைந்தனர். 25 கிலோ தங்க நகைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 162 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றப்பத்திரிக்கை முருகன் மீதும் சுரேஷ் மீதும் தாக்கல் செய்யப்படாத நிலையில்,ஜே.எம்-1 நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முன்வந்தது.

இதனை அடுத்து விரிவான குற்றப்பத்திரிக்கை அவசர அவசரமாக தயார் செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் கோசல்ராம் உட்பட 25 பேர் சாட்சிகளாக கொண்டு 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை அன்மையில் ஜே.எம்-1 முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறிய போது, முருகன் போன்றோருக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுக்கும் நோக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டோம். நீதிமன்ற விசாரணையில் முருகன், சுரேஷ் உள்ளிட்டோருக்கு விரைவில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் எனக் கூறியுள்ளனர்

Published by
Rebekal

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago