இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி மக்களவை தேர்தல் நேற்றுடன் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதன் பின்னர் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கருத்து கணிப்பு தொடர்பாக ஈரோட்டில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,திமுக பெருமைப்பட ஒன்றுமில்லை. தேர்தல் கருத்துக்கணிப்பில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜக 50% வெற்றி பெற வாய்ப்புள்ளது.அந்நிய நாடுகளிடமிருந்து எரிபொருட்கள் வாங்கும் நிலைமையை மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் .நிலத்தடியில் எரிபொருட்கள் உள்ளதா என்ற முடிவை பிரதமர் மோடி எடுக்கவில்லை ,முந்தைய அரசு அனுமதி கொடுத்ததால்தான் விளை நிலம் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது.தமிழகத்தில் பாஜகவுக்கு 2 இடம் கிடைத்தாலும் மிகப்பெரிய வெற்றிதான்.காங்கிரஸ் என்னும் பெருங்காய டப்பாவுடன் மற்றகட்சிகள் இணைவது சாத்தியமில்லை.அமமுக வாக்குகளை பிரிப்பதால அதிமுக தோல்வி அடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…