அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அனுமதி அளித்ததற்கு ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் முருகன்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இதனிடையே தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டது. பின்னர் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ,பாஜக மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா மற்றும் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.அப்பொழுது , அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…